மறப்பி லாச்சிவ யோகம்வேண் டுகினும் வழுத்த ரும்பெரு வாழ்வுவேண் டுகினும் இறப்பி லாதின்னும் இருக்கவேண் டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே பிறப்பி லான்எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்றுநீ பெயர்ந்திடல் நெஞ்சே வறப்பி லான்அருட் கடல்அவன் அமர்ந்து வாழும் ஒற்றியின் வருதிஎன் னுடனே