மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும் இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர் பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம் பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே