மலங்கி வஞ்சகர் மாட்டிரந் தையகோ வருந்திநெஞ் சயர்வுற்றே கலங்கி நின்திருக் கருணையை விழையும்என் கண்அருள் செய்யாயோ இலங்கி எங்கணும் நிறைந்தருள் இன்பமே எந்தையே எந்தாயே நலங்கி ளர்ந்திடும் தணிகையம் பதியமர் நாயக மணிக்குன்றே