மழுவார் தருகைப் பெருமான் மகனார் மயில்வா கனனார் அயில்வேலார் தழுவார் வினையைத் தணியார் அணியார் தணிகா சலனார் தம்பாதம் தொழுவார் அழுவார் விழுவார் எழுவார் துதியா நிற்பார் அவர்நிற்கப் புழுவார் உடலோம் பிடும்என் முனர்வந் தருள்தந் தருளிப் போனாரே