மாசுடையேன் பிழைஅனைத்தும் பொறுத்துவர மளித்தாள் மங்கையர்கள் நாயகிநான் மறைஅணிந்த பதத்தாள் தேசுடையாள் ஆனந்தத் தெள்ளமுத வடிவாள் சிவகாம வல்லிபெருந் தேவே஢உளங் களிப்பக் காசுடைய பவக்கோடைக் கொருநிழலாம் பொதுவில் கனநடஞ்செய் துரையேநின் கருணையையே கருதி ஆசுடையேன் பாடுகின்றேன் துயரமெலாந் தவிர்ந்தேன் அன்பர்பெறும் இன்பநிலை அனுபவிக்கின் றேனே