மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால் நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம் கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே