Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5468
மாதவத்தால் நான்பெற்ற வானமுதே எனது 

வாழ்வேஎன் கண்ணமர்ந்த மணியேஎன் மகிழ்வே 
போதவத்தால் கழித்தேனை வலிந்துகலந் தாண்ட 

பொன்னேபொன் னம்பலத்தே புனிதநடத் தரசே 
தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச் 

செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்தபெரும் பொருளே 
பூதலத்தே அடிச்சிறியேன் நினதுதிரு வடிக்கே 

புகழ்மாலை சூட்டுகின்றேன் புனைந்துகலந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.