Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3101
மானினைத்த அளவெல்லாங் கடந்தப்பால் வயங்கும்

மலரடிகள் வருந்தியிட மகிழ்ந்துநடந் தருளிப்
பானினைத்த சிறியேன்நான் இருக்குமிடத் தடைந்து

பணைக்கதவந் திறப்பித்துப் பரிந்தழைத்து மகனே
நீநினைத்த வண்ணமெலாங் கைகூடும் இதுஓர்

நின்மலம்என் றென்கைதனில் நேர்ந்தளித்தாய் நினக்கு
நானினைத்த நன்றிஒன்றும் இலையேநின் அருளை

நாயடியேன் என்புகல்வேன் நடராஜ மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.