மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல் நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார் ஏன்கண்டனை என்றாள்அனை என்என்றுரைக் கேனே