Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4881
மாயைவினை ஆணவமா மலங்களெலாம் தவிர்த்து 

வாழ்வளிக்கும் பெருங்கருணை வள்ளல்வரு தருணம் 
மேயதிது வாம்இதற்கோர் ஐயம்இலை இங்கே 

விரைந்துலகம் அறிந்திடவே விளம்புகநீ மனனே 
நாயகன்றன் குறிப்பிதுஎன் குறிப்பெனநீ நினையேல் 

நாளைக்கே விரித்துரைப்பேம் எனமதித்துத் தாழ்க்கேல் 
தூயதிரு அருட்ஸோதித் திருநடங்காண் கின்ற 

தூயதிரு நாள்வருநாள் தொடங்கிஒழி யாவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.