Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3153
மாவின்மணப் போர்விடைமேல் நந்திவிடை மேலும்

வயங்கிஅன்பர் குறைதவிர்த்து வாழ்வளிப்ப தன்றிப்
பூவின்மணம் போல்உயிருக் குயிராகி நிறைந்து

போகம்அளித் தருள்கின்ற பொன்னடிகள் வருந்தத்
தாவிநடந் திரவின்மனைக் கதவுதிறப் பித்தே

தயவுடன்அங் கெனைஅழைத்துத் தக்கதொன்று கொடுத்தாய்
நாவின்மணந் துறப்புலவர் வியந்தேத்தும் பொதுவில்

நடம்புரியும் நாயகநின் நற்கருணை இதுவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.