மின்னோ டொக்கும் வேணியினார் விமலர் ஒற்றி வாணர்எனைத் தென்னோ டொக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்தறியார் என்னோ டொத்த பெண்களெலாம் ஏசி நகைக்க இடருழந்தேன் கொன்னோ டொத்த கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே