Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3090
மீதானத் தருள்ஒளியாய் விளங்கியநின் அடிகள்

மிகவருந்த நடந்திரவில் வினையேன்றன் பொருட்டாச்
சீதானக் கதவுதனைத் திறப்பித்துச் சிறியேன்

செங்கையில்ஒன் றளித்தினிநீ சிறிதுமஞ்சேல் இங்கு
மாதானத் தவர்சூழ வாழ்கஎன உரைத்தாய்

மாமணிநின் திருவருளின் வண்மைஎவர்க் குளதே
ஓதானத் தவர்தமக்கும் உணர்வரிதாம் பொருளே

ஓங்கியசிற் றம்பலத்தே ஒளிநடஞ்செய் பதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.