Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :390
முடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
முறியனேன் தனக்குநின் அடியாம்
ஏடவிழ் கமலத் திருநற வருந்த
என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
ஐயருக் கொருதவப் பேறே
கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
குற்றமர்ந் திடுகுணக் குன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.