முந்தை மறையோன் புகழொற்றி முதல்வ ரிவர்தம் முகநோக்கிக் கந்தை யுடையீ ரென்னென்றேன் கழியா வுன்றன் மொழியாலே யிந்து முகத்தா யெமக்கொன்றே யிருநான் குனக்குக் கந்தையுள திந்த வியப்பென் னென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ