Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3805
முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு 

முன்னின்உருக் காட்டினைநான் முகமலர்ந்திங் கிருந்தேன் 
இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே 

எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்னசெய்வேன் அந்தோ 
அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே 

ஆருயிர்வைத் திருக்கின்றேன் ஆணைஇது கண்டாய் 
என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே 

என்னுயிர்க்குப் பெருந்துணையே என்னுயிர்நா யகனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.