Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3978
மும்மையை எல்லாம் உடையபே ரரசை 

முழுதொருங் குணர்த்திய உணர்வை 
வெம்மையைத் தவிர்த்திங் கெனக்கரு ளமுதம் 

வியப்புற அளித்தமெய் விளைவைச் 
செம்மையை எல்லாச் சித்தியும் என்பால் 

சேர்ந்திடப் புரிஅருட் டிறத்தை 
அம்மையைக் கருணை அப்பனை என்பே 

ரன்பனைக் கண்டுகொண் டேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.