Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3100
முழுதும்உணர்ந் தவர்முடிமேல் முடிக்குமணி யாகி

முப்பொருளு மாகியநின் ஒப்பில்அடி மலர்கள்
கழுதும்உணர் வரியநடுக் கங்குலிலே வருந்தக்

கடிதுநடந் தடிநாயேன் கருதுமிடத் தடைந்து
பழுதுபடா வண்ணம்எனைப் பரிந்தழைத்து மகனே

பணிந்திதனை வாங்கெனஎன் பாணியுறக் கொடுத்துத்
தொழுதெனைப்பா டுகஎன்று சொன்னபசு பதிநின்

தூயஅருட் பெருமையைஎன் சொல்லிவியக் கேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.