முவரை அளித்த முதல்வனை முக்கண் முர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்துநின் றேத்தாப் பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகைசேர் கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே