Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4141
மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய 

முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே 
ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன் 

அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே 
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப் 

பரநாத நாட்டரசு பாலித்த பதியே 
ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே 

என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.