Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3096
மூவருக்கும் எட்டாது மூத்ததிரு அடிகள்

முழுதிரவில் வருந்தியிட முயங்கிநடந் தருளி
யாவருக்கும் இழிந்தேன்இங் கிருக்கும்இடத் தடைந்தே

எழிற்கதவந் திறப்பித்துள் எனைஅழைத்து மகனே
தேவருக்கும் அரிதிதனை வாங்கெனஎன் கரத்தே

சித்தமகிழ்ந் தளித்தனைநின் திருவருள்என் என்பேன்
பூவருக்கும் பொழிற்றில்லை அம்பலத்தே நடனம்

புரிந்துயிருக் கின்பருளும் பூரணவான் பொருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.