Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3654
மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது மேன்மேற் கலந்துபொங்க 

விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம் விளங்கஅறி வறிவதாகி 
உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந் துவட்டாதுள் ஊறிஊறி 

ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே உள்ளபடி உள்ளஅமுதே 
கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட கண்ணே கலாந்தநடுவே 

கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே கணிப்பருங் கருணைநிறைவே 
துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட் சுகபோக யோகஉருவே 

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.