Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4666
மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன் 

இதயத்தே விளங்கு கின்ற 
துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத் 

தலைவனைச்சிற் சுகந்தந் தானைச் 
செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை 

ஒன்றான தெய்வம் தன்னை 
அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ 

தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.