மெய்யனைஎன் துயர்தவிர்த்த விமலனைஎன் இதயத்தே விளங்கு கின்ற துய்யனைமெய்த் துணைவனைவான் துரியநிலைத் தலைவனைச்சிற் சுகந்தந் தானைச் செய்யனைவெண் நிறத்தனைஎன் சிவபதியை ஒன்றான தெய்வம் தன்னை அய்யனைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ