மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில் நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தைய இப் பொய்யனைநீ கைவிட் டிடநினை யேல்அருள் வாய்கரு ணைக்கடலே