வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும் கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும் அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சமேல் என்மேல் ஆணைகண்டாய் செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே