வஞ்சமட மாதரார் போகம் என்னும் மலத்தினிடைக் கிருமிஎன வாளா வீழ்ந்தேன் கஞ்சமலர் மனையானும் மாலும் தேடக் காணாத செங்கனியில் கனிந்த தேனே தஞ்சம் என்போர்க் கருள்புரியும் வள்ளலேநல் தணிகைஅரை சேஉனது தாளைப் போற்றேன் எஞ்சல்இலா வினைச்சேம இடமாய் உற்றேன் என்குறையை எவர்க்கெடுத்திங் கியம்பு கேனே திருச்சிற்றம்பலம் முறையிட்ட பத்து அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்