வட்டவான் சுடரே வளரொளி விளக்கே வயங்குசிற் சோதியே அடியேன் இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த இன்பமே என்பெரும் பொருளே கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த கடவுளே கனகமன் றகத்தே நட்டமே புரியும் பேரரு ளரசே நம்பினேன் கைவிடேல் எனையே