வண்டார் கொன்றை வளர்சடையார் மதிக்க எழுந்த வல்விடத்தை உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார் உடையார் என்பால் உற்றிலரே கண்டார் கண்ட படிபேசக் கலங்கிப் புலம்பல் அல்லாது செண்டார் முலையாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே