வண்ணப்பொன் னம்பல வாழ்வேஎன் கண்ணினுள் மாமணியே சுண்ணப்பொன் நீற்றொளி ஓங்கிய சோதிச் சுகப்பொருளே எண்ணப்ப யின்றஎன் எண்ணம் எலாம்முன்னர் ஈகஇதென் விண்ணப்பம் ஏற்று வருவாய்என் பால்விரைந் தேவிரைந்தே