வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல் இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய் அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய் அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த் திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வம்ஒன்றே கண்டீர்