Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :608
வண்மைபெறு நின்அன்பர் எல்லாம் நின்னை
வந்தனைசெய் தாநந்த வயத்தே நின்றார்
பெண்மையுறும் மனத்தாலே திகைத்தேன் நின்சீர்
பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நானோர்
ஒண்மையிலேன் ஒழுக்கமிலேன் நன்மை என்ப
தொன்றுமிலேன் ஓதியேபோல் உற்றேன் மிக்க
அண்மையில்வந் தருள்புரிவோய் என்னே வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.