வந்தார் அல்லர் மாதேநீ வருந்தேல் என்று மார்பிலங்கும் தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் தந்தார் அல்லர் தயை உடையார் சந்தார் சோலை வளர்ஒற்றித் தலத்தார் தியாகப் பெருமானார் பந்தார் முலையார்க் கவர்கொடுக்கும் பரிசே தொன்றும் பார்த்திலமே