வன்சொற் புகலார் ஓர்உயிரும் வருந்த நினையார் மனமகிழ இன்சொற் புகல்வார் ஒற்றியுளார் என்நா யகனார் வந்திலரே புன்சொற் செவிகள் புகத்துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன் தென்சொற் கிளியே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே