Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4161
வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும் 

மரபினர்அன் றாதலினால் வகுத்தஅவர் அளவில் 
அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக 

அன்றிஅருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே 
இன்புறஎன் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான் 

ஈன்றதனித் தந்தையே தாயேஎன் இறையே 
துன்பறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுதிருப் பொதுவில் 

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.