Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :822
வன்மை செய்திடும் வறுமைவந் தாலும்
மகிழ்வு செய்பெரு வாழ்வுவந் தாலும்
புன்மை மங்கையர் புணர்ச்சிநேர்ந் தாலும்
பொருந்தி னாலும்நின் றாலும்சென் றாலும்
தன்மை இல்லவர் சார்பிருந் தாலும்
சான்ற மேலவர் தமைஅடைந் தாலும்
நன்மை என்பன யாவையும் அளிக்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே
பாடல் எண் :1030
வன்மை பேசிய வன்தொண்டர் பொருட்டாய் 

வழக்குப் பேசிய வள்ளல்நீர் அன்றோ 
இன்மை யாளர்போல் வலியவந் திடினும் 

ஏழை யாம்இவன் என்றொழித் திட்டால் 
தன்மை அன்றது தருமமும் அன்றால் 

தமிய னேன்இன்னும் சாற்றுவ தென்னே 
பொன்மை அஞ்சடை யீர்ஒற்றி உடையீர் 

பொய்யன் என்னில்யான் போம்வழி எதுவோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.