வலமே உடையார் நின்கருனை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன் மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும்பேய் வாக்கும்உவர்ச் சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பறியேன் நலமே ஒற்றி நாடுடையாய் நாயேன் உய்யும் நாள்என்றோ