வழுத்தார் புரத்தை எரித்தார்நல் வலத்தார் நடன மலரடியார் செழுத்தார் மார்பர் திருஒற்றித் திகழுந் தியாகப் பெருமானார் கழுத்தார் விடத்தார் தமதழகைக் கண்டு கனிந்து பெருங்காமம் பழுத்தார் தம்மைக் கலந்திடநற் பதத்தார் என்றும் பார்த்திலரே