Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3471
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் 

வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த 

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் 

நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் 

சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்  
  ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.