Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1075
வாடு கின்றனன் என்றனை இன்னும் 

வருந்த வைக்கினும் மறந்திடேன் உன்னைப் 
பாடு கின்றனன் பாவியேன் என்னைப் 

பாது காப்பதுன் பரம்அது கண்டாய் 
தேடு கின்றமால் நான்முகன் முதலாம் 

தேவர் யாவரும் தெரிவரும் பொருளே 
சேடு நின்றநல் ஒற்றியூர் வாழ்வே 

திருச்சிற் றம்பலம் திகழ்ஒளி விளக்கே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.