Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3149
வானதுவாய்ப் பசுமலம்போய்த் தனித்துநிற்குந் தருணம்

வயங்குபரா னந்தசுகம் வளைந்துகொள்ளுந் தருணம்
தானதுவாய் அதுதானாய்ச் சகசமுறுந் தருணம்

தடையற்ற அனுபவமாந் தன்மையடி வருந்த
மானதுவாய் நடந்தெளியேன் இருக்குமிடத் தடைந்து

மணிக்கதவந் திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்து
ஆனதொரு பொருளளித்தாய் நின்னருள்என் என்பேன்

அம்பலத்தே நடம்புரியும் எம்பெருஞ்சோ தியனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.