பாடல் எண் :3660
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு வத்திலே வான்இயலிலே
வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே வண்ணத்தி லேகலையிலே
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே
வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை வைத்தஅருள் உற்றஒளியே
தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித் திரளிலே தித்திக்கும்ஓர்
தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச் செப்பிடாத் தெள்ளமுதமே
தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த சொருபமே சொருபசுகமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராசபதியே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.