Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5741
வான்கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் 

மாதவம்பன் னாட்புரிந்து வருந்துகின்றார் அந்தோ 
நான்கண்ட காட்சியவர் கண்டிலரே உலகில் 

நான்ஒருபெண் செய்ததவம் எத்தவமோ அறியேன் 
கோன்கண்ட குடிக்கொன்றும் குறைவிலையேல் அண்ட 

கோடிஎலாம் தனிப்பெருஞ்செங் கோல்நடத்தும் இறைவர் 
தான்கண்ட குடியானேன் குறைகளெலாம் தவிர்ந்தேன் 

தனித்தவள மாடமிசை இனித்திருக் கின்றேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.