Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5688
வாழிமா மணிமன் றிறைவனே எனக்கு 

மாலைவந் தணிந்தனன் என்றாள் 
ஊழிதோ றூழி உலவினும் அழியா 

உடம்பெனக் களித்தனன் என்றாள் 
ஆழிசூழ் உலகோ டண்டங்கள் அனைத்தும் 

அளிக்கஎன் றருளினான் என்றாள் 
ஏழியன் மாட மிசையுற வைத்தான் 

என்றனள் எனதுமெல் லியலே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.