Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3803
வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட 

மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த 
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ 

இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ 
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு 

மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ 
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன் 

கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.