விடைய வாழ்க்கையை விரும்பினன் நின்திரு விரை மலர்ப் பதம்போற்றேன் கடைய நாயினேன் எவ்வணம் நின்திருக் கருணைபெற் றுய்வேனே விடையில் ஏறிய சிவபரஞ் சுடர்உளே விளங்கிய ஒளிக்குன்றே தடையி லாதபேர் ஆனந்த வெள்ளமே தணிகைஎம் பெருமானே