விண்ணுறு சுடரே என்னுள் விளங்கிய விளக்கே போற்றி கண்ணுறு மணியே என்னைக் கலந்தநற் களிப்பே போற்றி பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி எண்ணுறும் அடியார் தங்கட் கினியதெள் அமுதே போற்றி