விருந்தினர் தம்மை உபசரித் திடவும் விரவுறும் உறவினர் மகிழத் திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும் சிறியனேற் கருளுதல் வேண்டும் வருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை வாரியே வடிவுறு மயிலே இருந்திசை புகழும் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே