Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5583
விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே 

மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர் 
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும் 

செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய 
வரைந்துவரைந் தெல்லாஞ்செய் வல்லசித்தன் தானே 

வருகின்ற தருணம்இது வரம்பெறலாம் நீவீர் 
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களின்நீர் பெருகிக் 

கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.