விளைப்பேன் பவமே அடிச்சிறியேன் வினையால் விளையும் வினைப்போகம் திளைப்பேன் எனினும் கதிர்வடிவேல் தேவே என்னும் திருமொழியால் இளைப்பேன் அலன்இங் கியம்புகிற்பேன் எனக்கென் குறையுண் டெமதூதன் வளைப்பேன் எனவந் திடில்அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே