Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3718
விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த 

வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக் 
கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக் 

கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும் 
நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து 

நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார 
வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.